பணம் என்ற பின்புதான் காதல்

பணம் என்ற
பின்புதான் காதல்
எனும் குழந்தையும்,
முத்தம் எனும்
உரசலும் பிறக்கின்றது
பைத்தியகார உலகத்தில்.
பத்தினிகளை காண்பது
அரிதாகி விட்டது,
எளிதாக கிடைக்கப் பெறாத
பணத்தால் குணம்
மாறுபட்டு.
மர்ம முடிச்சுக்களுடன்,
எத்தனை வழிகளுடன்
விழிகள் வைத்து
தூங்குகின்றன பார்வையற்று
இன்று.
மாறிவிடும் இன்று,
தீர்ந்துவிடும் என்று,
கிடைத்தது ஏக்கமும்,
பல தாக்கங்களும்
மட்டுமே.
பொத்துவில் அஜ்மல்கான்