பரிசில் வளர்ந்து வரும் ஈழத்தவர் நீள்படங்கள்

புலம்பெயர் ஈழத்து திரை முயற்சிகளில் தலைநகர் பரிஸ் எப்போதும் சுறுசுறுப்பாகவே இருந்து வருகின்றது.பல்வேறு விருதுகளைப் பெற்ற பல குறும்படங்களை உருவாக்கிய கலைஞர்கள் கூட்டத்தினை பரிஸ் மண் தாங்கி இருக்கின்றது.

அதன்வரிசையில் தற்போது மூன்று படங்கள் படப்பிடிப்பில் உள்ளதது

1 : ஏணை
முள்ளந்தண்டுகள், கல்லுச்சாறி ஆகிய குறும்படங்களை இயக்கியிருந்த அஜந்தன் இப்படத்தினை இயக்குகின்றார்.

2 – ஆறாவது நிலம்
நானாக நான் ,பிரதி போன்ற குறும்படத்தினை இயக்கியிருந்த அகீபன் இப்படத்தினை இயக்குகின்றார்.

3 – நாம்பன்
இசையமைப்பாளர் ஈஸ்வர் குமார் மற்றும் ஒளிப்பதிவாளர் பொன் கேதாரன் ஆகியோர் கூட்டாக இப்படத்தினை இயக்குகின்றனர்.

இதேவேளை சுதர்சன் அவர்கள் இயக்கியிருந்த பதில் எனும் நீள்படமும் விரைவில் திரைக்கு வர இருக்கின்றது.