பறை…


முப்பாட்டன்
காலத்து
மூத்த இசைக்கருவி
பறை.
உயிர்
இருப்பின்
நிலை அறியும்
அன்றைய
மருத்துவ கருவி
பறை.
எழுச்சிக்கும்
புரட்சிக்கும்
போர் வெற்றிக்கும்
முழங்கும் இசை
பறை.
விடுதலைக்கு
குரல் கொடுத்து
தீயினில் வெந்த
வீரப் பெண்மணி
செங்கொடியின்
கரங்களில் தவழ்ந்த
பறை.
புலத்திலும்
களத்திலும்
கலைஞர்கள்
வசமாகி இன்று
இசை மீட்கும்
பறை.
ஓவியர்
சீலனின் சித்திரங்கள்
பேசும் தூரிகையின்
சிதறலில் விரிந்த
படைப்பாக
பறை…

ஆக்கம் கவிஞர் தயாநிதி