பற்றியது..

மூட்டினர்
தீயதை மூட்டினர்
அறிவில்
பற்றற்றவர்
தீயதை மூட்டினர்…
பட்டதாரிகள்
பலரின்
பட்டறையை
சுட்டு தீத்தனர்…
எட்டுத்
திக்கும் உயர்ந்து
பட்டொளி
வீசிய யாழ் நூலகம்
தீக்கிரையானது.
தீயவரின்
தீய நோக்கினால்
தமிழரின்
அறிவுச் சோலை
ஆறாத்தீயில்…
இன அழிப்பின்
ஆரம்ப படலம்
அகிலத்தில்
கொழுந்து விட்ட
மே31.1981 னை
மறக்க முடிமா ?
வஞ்சகரின்
கொடும் செயல்
வையத்தில்
தீரா வடுக்களே..இ

ஆக்கம் கவிஞர் தயாநிதி