பல இலட்சம் ரூபாயை தாயக உறவுகளுக்கு உதவி வழங்கிய யேர்மனி Dortmund பொங்கல் விழா குழுவினர்

பத்தொண்பது இலட்சத்து ஆறுபத்து இரண்டாயிரத்து ஆறுபத்தி ஆறுரூபா முபத்தி ஆறுசதம் தாயக உறவுகளுக்கு உதவி வழங்கிய யேர்மனி டோட்முண்ட்பொங்கல் விழா குழுவினர்

யேர்மனியில் கடந்த 7வருடங்களாக டோற்முன் வர்த்தகர்களும் பொதுமக்களும் இணைந்து நடாத்தும் 7வது வருடாந்த பொங்கல்விழா 18.1.2020 ம் திகதி மிக சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் பெருமளவு மக்கள் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் பெரும்பாலும் இளம் சமூகத்தினராகவே இருந்தார்கள். இவ்விழாவில் இவர்களை இணைத்து நிகழ்ச்சிகளை இளையோர் கையில் ஒப்படைத்த விழாக்குழுவினரை பாராட்டவேண்டும். விழாவுக்காக சேர்ந்த நிதியில் தாயகமக்களில் பெரும்பாலும் முன்னைய உடல்வலுவிழந்த போராளிகளின் துயர்போக்கும் உதவிக்காக 20 இலட்சம் ரூபாயை வழங்கிய கணக்குகளை மேடையில் அறிவித்தும் மண்டபத்தில் அறிவித்தல்களை வைத்தும் மக்களுக்கு தமது சமூகசேவையை உணர்த்தினார்கள். விழா குறித்தநேரத்தில் ஆரம்பித்து 20.30மணிக்கு நிறைவாகியது.

பண்ணாகம் இணையத்துக்கு பொங்கல் விழாக்குழுவினரின் நன்றிகள்