பளிங்குக்கல் !கவிதை மீரா,ஜெர்மனி

அதிகாலை சூரிய உதயத்தில்

விழிகளை கவர்ந்தது

அந்த பளபளக்கும் பளிங்குக்கல்

ஆவலுடன் கையில் எடுத்து

ஆனந்தத்தில் அழகு பார்த்தேன்

ஒவ்வொரு கோணத்திலும்

ஒவ்வொரு விம்பம்

கண்கவர் வண்ணங்களில்

கற்பனைகளும் கனவுகளும்

காட்சியாக தெரிந்தது

அதிசயத்தை ஏந்தியவாறே

மெல்ல நடக்கையில்

கல் இடறி தடுக்கி வீழ்ந்து

பளிங்குக்கல் பரிதாபமாக உடைந்தது

சிதறிய துகள்களில் கண்ணீர் துளிகள்

வர்ணங்களை தொலைத்து

வாட்டமுடன் கருமை நிறத்தை

மட்டும் பூசிக்கொண்டது

ஒருகணம் சந்தோஷமும்

மறுகணம் வாட்டமும் தந்த

அந்த பளிங்குக்கல்

வாழ்க்கையின் சூட்சமத்தை

எனக்கு சொல்லித்தந்தது

மீரா

ஜெர்மனி