பாரதிபுத்தகாலயத்தின் “குழவிப்பூங்கா “ மூன்றாவது நூல்வெளியீடு

 

இன்று (17.8.18) சென்னை புத்தகத்திருவிழாவில் பாரதிபுத்தகாலயத்தின் வெளியீடான“குழவிப்பூங்கா “ கலகலக்கப்போகிறது.
எனது மூன்றாவது நூல் குழவிப்பூங்கா.
இந்நூலின் வருகைக்கு காரணமாக இருந்த ஐயா.மாடசாமி அவர்களுக்கு எனது மனம் உவர்ந்த நன்றிகள்?? ஐயாவின் அணிந்துரை இந்நூலுக்கு ஒரு மகுடமே!
தங்களது பதிப்பகத்தின் ஊடாக வளரும் சிறார்களுக்காக இந்நூலை கையளிக்க முன்வந்த பாரதிபுத்தகாலயத்தின் உரிமையாளர் ஐயா.நாகராஜன் அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நாளும் பரபரப்பான வாழ்வியலில் எழுதுவதற்கான சூழலை தங்களது உற்சாகமான வார்த்தையால் வாரிவழங்கிய குடும்பத்தினருக்கும்,தோழர் தோழிகளுக்கும் எனது நன்றிகள் பற்பல.
தங்களது உற்சாகத்தின் மூலம் எனது எழுத்தை வலிமைப்படுத்த வாரீர் என யாவரையும் தோழமையுடன் அழைக்கிறேன்.
வாணமதி