பார்வை

வானம் இடிந்து
காற்று விலகி
கால்கள் சறுக்கி
ஏக்கம் பரவி
ஏழ்மை உலவி
இன்னல் நிறைந்தாலும்
மானம் இழக்காதே
சாவும் நெருங்கி
சஞ்சலம் பெருகி
ஓலம் உயர்ந்து
வீழ நினைத்து
உன்னை அழித்தாலும்
உண்மை துறக்காதே
உன்னை பாத்து வளரும் பிள்ளை
பாவம் பெருகும் உண்மை
மாற்ற நினைக்காதே
உன்னை மாற்ற நினைக்காதே
நின்று நிலைக்கும் சக்தி
உன்னில் இருக்கு
அஞ்சிநடக்கா வீரம்
நெஞ்சில் இருக்கு
என்றும் மறவாதே
அதை நீ என்றும் மறவாதே!
தே.பிரியன்