பார்…. …, ….,

கற்பனைகளை
கடந்த சித்திரம்.
மனங்களை
உலுப்பும் ஓவியம்….
கண்டதும்
கடக்க முடியாத
காவியம்
கண்களில்
கண்ணீரின் கோலம்.
என்னுள்
எழும் எண்ணங்கள்
உங்களின்
விருப்புக்கானதல்ல.
சில நிமிட
சிந்தனைக்கானது.
மரம் வீழ
வானம் கிழிகின்றது.
மனித வாழ்வுக்கு
ஆதாரமானவற்றை
சேதாரமாக்கி
பேரழிவின் உச்சத்தில்!!!,


ஆக்கம் கவிஞன் தயாநிதி