நிழல் கூட
குறிப்பிட்ட
காலம் வரை…
நிஜம் கூட
நிறம் மாறும்
நிதர்சனம்…
உணர்வுகள் கூட
உயிர்ப்பின்றி
உறை தளத்தில்..
உறவுகள் கூட
இருப்புக் கண்டு
கை குலுக்குது…
நெருப்புக்குள்
விருப்புக்கள்
வேகும் காலம்…
இன்றைய உலகில்
உண்மைகள்
கருக் கலைப்பு…
மனிதன் வாழ்வில்
மாயைகளின்
போலிப் பிரசவங்கள்…
புரியாத
புதிராக நாகரீக
நகர்வு விழியுங்கள்…
ஆக்கம் கவிஞர்தயாநிதி