பிரான்ஸ்’சிதறல்‘, ‚கட்டைவிரல்‘ ஆகிய இரு நூல்களின் அறிமுக விழா, 03.06.17

பிரான்ஸ் திவ்யநாதன் செல்வத்துரை அவர்கள் எழுதி, ‚செல்லமுத்து வெளியீட்டகம்‘ ஈழத்தில் அறிமுகம் செய்யும் ‚சிதறல்‘, ‚கட்டைவிரல்‘ ஆகிய இரு நூல்களின் அறிமுக விழாவானது, 03.06.2017 சனிக்கிழமை பிற்பகல் 02.30 மணிக்கு வன்னியின் இனிய வாழ்வு இல்லம் கேட்போர் கூடத்தில்இடம்பெறும். நிகழ்வுக்கு இலக்கிய விமர்சகரும், முத்து ஐயன்கட்டு வலதுகரை மகா வித்தியாலய அதிபருமான ‚கம்பீரக்குரலோன்‘ சி.நாகேந்திரராசா தலைமை வகிப்பார்.

பிரதம விருந்தினராக டான் தொலைக்காட்சி நிகழ்ச்சி மேலாளர் ‚பண்பலை வேந்தன்‘ ரி.எஸ்.முகுந்தன் அவர்கள் கலந்துகொள்வார்.