பிரான்ஸ் ஐஸ்வராலயம் நடத்திய இசைமாருதம் 2017 பாரிஸின் சிறப்பாக நடைபெற்றது.!

பிரான்ஸ் ஐஸ்வராலயம் நடத்திய இசைமாருதம் 2017 பாரிஸின் புறநகர் பகுதியான AULNAY SoUS BOIS வில் 22.10.2017 அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது.!

இவ் நிகழ்வில் கரோக்கி பாடல்கள் நடனங்கள் மாணவ மாணவிகளின் கலைநிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்விக்கு லண்டனலிருந்து பாடகர் பாடகி திரு.திருமதி. அனுரா தம்பதியினரும் மற்றும் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.

பிரதம விருந்தினராக ஜேர்மனியிலிருந்து முன்னாள் தமிழ்அருவி பத்திரிகையின் முதன்மை ஆசிரியரும் நீண்ட காலமாக பல்துறைகளில் செயல்பட்டு வருபவருமான, திரு.நயினை விஜயன் அவர்கள் துணைவியார் சகிதம் கலந்து சிறப்பித்தார்கள்.
அவர்களுக்கு விழா அமைப்பாளர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்கள்.

பாடகியும் நடிகையுமான தர்சினி, நயினை கரோக்கி நாயகன் சிவா இருவரின் மிகுந்த அர்ப்பணிப்பில் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியை பாரிஸின் முன்னணி அறிவிப்பாளர்களில் ஒருவரான குரு நாகேசு தொகுத்து வழங்கினார்.