பிரான்ஸ் மாநாட்டில் “ புயல் “ இறுவெட்டு வெளியீட்டு விழா…….

இரா. செங்கதிர் அவர்களின் இசையில் „புயல்“ இறுவெட்டு வெளியீட்டு விழா 17.11.2019 (ஞாயிற்றுக்கிழமை) பிரான்ஸ் நாட்டில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் பிரதம விருந்தினராக GTV தொலைக்காட்சி யேர்மன் இணைப்பாளர் திரு.சிவலிங்கம் அவர்கள் கலந்துகொண்டார்கள். பொதுச்சுடர் ஏற்றல், மங்கள விளக்கேற்றல், அகவணக்கத்தை தொடர்து வரவேற்புரையினை பிரான்ஸ் அகரம் நிஷாந்தி அவர்கள் நிகழ்த்தினார் தொடர்ந்து வரவேற்பு நடனம் ,இறுவெட்டு பாடல்களில் பாடிய அனைத்து குழந்தை நட்சத்திரங்களின் அருமையான பாடல்கள் மண்டபம் நிறைந்த மக்களின் கைதட்டல்களுடன் மனதை உருக்கிய பாடலாக அமைந்திருந்தது. தொடர்ந்து இறுவெட்டு வெளியீட்டுரையினை கி.த.கவிமாமணி யேர்மனி அவர்கள் நிகழ்த்தினர். வெளியீட்டுரையினை தொடர்ந்து இறுவெட்டு வெளியீடுசெய்யப்பெற்றது. இறுவெட்டில் பாடிய குழந்தைகளே இறுவெட்டை வெளியீடு செய்தமை பாராட்டவேண்டிய விடயம்.
நிகழ்வில் கலந்து கொண்ட பிரான்ஸ்வாழ் மூத்த கலைஞர்கள், கழகம்சார்ந்தவர்கள், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், என அனைவரும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புப்பிரதிகளையும் பெற்றுக்கொண்டார்கள். தொடர்ந்து இறுவெட்டில் பதிந்த அருமையான பாடலுக்கு சிறப்பான நடனமும் அரங்கை அழகுபடுத்த. வாழ்த்துரைகளை Etr வானொலி, அகர சஞ்சிகை ஆசிரியர் திரு.த.இரவீந்திரன் மற்றும் பிரான்ஸ் திரு.பாலச்சந்திரன் ஆகியோர் உரைநிகழ்த்தினார்கள். மதீப்பீட்டுரையினை திரு.தனபாலு அவர்கள் நிகழ்த்த ஏற்ப்புரையினையும், நன்றியுரையினையும் இரா.செங்கதிர் அவர்கள் நிகழ்த்தி விழா இனிதே நிறைவுகண்டது மகிழ்வே. நிகழ்வினை அழகுற பிரான்ஸ் அறிவிப்பாளர் திரு.அருள்மொழித்தேவன் சிறப்புடன் நிகழ்த்தினார்.

கி.த.கவிமாமணி….யேர்மனி