ஒரு நொடிகூட என் மௌனத்தை
தாங்கிக்க முடியாத உன் மனமென்ன
மலர் தோட்டமா என்றேன் .
மென்புன்னகையில் செவ்வந்தியும்
மல்லிகையும் தம் முகங்கள் காட்ட
மெல்ல காதருகில் „பிரியமா ??
சட்டென பிரிந்த உன் உதடுகளில்
சக்கரையும் தேனும் பாலும்
தடவியிருந்தாயோ நீ..
மகுடியின் பின்னே பாம்பாகி
மலர்க்கரங்களுக்குள் உன்
முகத்தை ஏந்தினேன்
மண்ணோடு போகும் வரை
என்னோடு உன் காதல்
வாழும் என்றேன்..
பாரிவள்ளலும் தோற்கும் உன்
பாசநீரோட்டத்தில் மீண்டும்
புதிது புதிதாய் பிறந்திருப்பேன்..
ரதிமோகன்