புதுப் பாடல்…

காற்றோடு
கலந்து கவி
பாடும் மூங்கில்
காயம் பல கண்டு
கலைஞன்
உதடுகளில் இசை
கொண்டு உறவாடுது..
நினைவுகளை
உருக்கி
கனவுகளை
கருக்கி
அன்பினை
பெருக்கி
வார்த்தைகளை
சுருக்கி
கவிதைக்கு கவிதையை
பாடலாக்கியது..
தோழமை
விரல் கொண்டு
வரிகளை
வார்த்திடவே
மூளையிடம்
விண்ணப்பிக்க
முன்னாண் வழி
எண்ணங்கள்
பயணிக்க கூட்டு
தயாரிப்பில்
பாடல் உருவானது..
வேகம்
கொண்டெழுந்த
மோகமதின்
தாகம் தணிக்கையாகி
வார்த்தைகளில்
பைந்தமிழ்
படாத பாடாகி
அழகான
பாடல் பிறந்தது..
கனிந்த தமிழை
குனிந்த விரல்கள்
வரைந்து முடிக்க
இதய ஒலியின்
லப்டப் மெட்டுக்குள்
தாளக் கட்டோடு
புதுப் பாடல்
கலை நயத்தோடு
காற்று வழி பயணிக்க
அலை பேசியூடே
இருப்பிடம் தேடி
பறந்தாச்சு….

ஆக்கம் கவிஞர் ரி.தயாநிதி