புது தேவலோகம் !கவித்தென்றல் ஏரூர்

பாதையை நீ கடக்கையிலே…
பாதியா நான் கரைகிறேனே
பார்வையில பார்வை பட்டு
வேர்வையில நனைகிறேனே
ஏறெடுத்து நீ பார்க்கையிலே
மார்பகத்தில் வேர் பிடித்து
காதல் தேர் இழுத்து போகிறேனே
புது தேவலோகம் தாண்டுறேனே
கார்முகிலே காரிகையே….
சீர் எடுத்து வந்து உனை
ஊர்முழுக்க சொல்லி…
தாராவாக்க எண்ணுறேனே
உன் தாகம் தீர்க்க சொல்லுறேனே
கவித்தென்றல் ஏரூர்