புத்தாண்டே வா…..


மிரட்டி
வாழ்ந்தவனும்
உலகை
சுருட்டி
வாழ்ந்தவனும்
மிரண்டு தவிக்கின்றான்.
திரண்டு
வந்த கொரோணா
கண்டு தலையை
கவிண்டு கொண்டான்.
எத்தனை
ஆட்டங்கள்
எத்தனை வட்ட
மேசை கூட்டங்கள்.
அடுத்தவன்
நாட்டுக்குள்
அத்துமீறிய
பிரவேசங்கள்..
அத்தனை
தேசங்களையும்
அடிவருடி நாடுகளின்
துணை கொண்டு
பேரழிவுக்குள்ளாக்கினர்..
ஐநா மன்றையும்
கைக்குள் போட்டு
வேடிக்கை காட்டினர்
அடுத்தவன் ஊருக்குள்
போரையும் திணித்தனர்..
கண்ணுக்கு
தெரியாத கொரோணாவே
நீ உன் கட்டுக்குள்
கொண்டு வந்து
வீட்டுக்குள் முடக்கி
அனைவர் கொட்டமும்
அடக்கிய ஆண்டானாய்
போதும் போய் விடு.
சித்திரையில்
பூத்த புத்தாண்டே
இத்தரை எங்கனும்
பற்றிய பிணி நீங்கி
அழகுற வாழ
அருளினை வழங்கிடு
வையம் உள்ளவரை
நன்றியாய் நாமிருப்போம்..

கவிஞர் ரி .தயாநிதி