****புன்னை மரத்துப் பூங்குயிலே****கவிதை நிழல் நேசன்

உன்னைக்கண்ட முதல் நாள் இன்னும் என்
உள்ளத்தில் நிலைத்து நிற்கிறது கண்ணே
கண்ணைக் கண்டதும் காதல் வந்ததால்,
காலம் முழுதுமுன் கண்ணே காட்சியானது
என்னை உனக்கு முழுதாய் கொடுத்து
எல்லாமே நீயாய் வாழ துவங்கிய நாளது.
பெண்ணைப்பெற்றவரின் பாரிய எதிர்ப்பு
பெரிதாதாக படவில்லை எம் காதலுக்கு.
விண்ணைத் தாண்டி வந்தாய் என்னிடம்
வீடுவாசல் மறந்து பறந்தோம் வேறிடம் .
மண்ணை விட்டு வந்தாலும் நாங்கள்
மங்களமாய் மாதங்கள் பல களித்தோம் .
அன்னை தந்தையாரின் வயிதெரிச்சலை
அடிவயிற்றில் கட்டிக்கொண்டாள் கட்டியாக
புன்னை மரத்துப் புன்னகைப் பூங்குயிலவள்
புற்றுநோய் கண்டு பூவுலகைப் பிரிந்தாள்.
உன்னைப்பிரிந்ததாக உலகம் சொல்லுதடி
உருவமற்று நீ உற்கார்ந்திருப்பதை யாரரிவர்

 

நிழல் நேசன்

Merken