புரிதல்?

புரிதல்
இருக்கும் இடத்தில்
ஆணவத்துக்கு
இடமில்லை.
புரிதல்
இருக்கும் இடத்தில்
போட்டிகளுக்கு
இடமில்லை.
புரிதல்
இருக்கும் இடத்தில்
அன்புக்கு
பஞ்சமில்லை.
புரிதல்
இருக்கும் இடத்தில்
ஆலோசனைகள்
தேவையில்லை.
மாறிவிட்டோம்
என்பதை விட
வலிகள் மாற்றி
விட்டது என்பதே
நிஜம்.
மனங்களை
உடைத்து விட்டு
முகங்களில்
புன்னகையை
தேடாதீர்.
கடும்
சொற்களை
வீசிவிட்டு
பாசாங்கு
செய்யாதீர்.
அதிகமான
உரிமையை
எடுத்துக் கொண்டு
அவதியுறாதீர்.
உறவு
என்பது அழகிய
புத்தகம்
அலட்சியம்
செய்யாதீர்.

ஆக்கம் கவிஞர் தயாநிதி