புலத்திலும்_ஈழத்திலும் கிறிஸ்துமஸ்

வீதிகள் எங்கும்
விழாக் கோலம்
வீடுகள் எங்கும்
ஒளி விளக்காம்

உள்ளமெல்லாம்
சந்தோச வெள்ளம்
உறவுகள் பலரும்
ஒன்று கூடல்களும்

பரிசுப் பொருளும்
பரிமாற்றங்களும்
கடைகளெல்லாம்
களை கட்டுகிறது

பேருந்திள் ஏறினால்
இருக்கை இல்லை
நின்று போகவும்
இடமுமில்லை…

எத்தனை இன்பம்
இந்த நாட்களில்
வெளிநாட்டில்
வெகு விமர்சையாக……

எங்கள்_நாட்டில்
ஒளிவிழாவாம்
ஊரெல்லாம் சந்தோசமாம்
தேர்தல் பிரச்சாரமும்
சேர்ந்தே பயணிக்க

இன்னொரு அணியினர்
#உண்ண_உணவின்
#உடுத்த_உடையின்றி
#உறங்க_வீடுன்றி
#அரைச்சாண்_வயிறு_நிரப்பமுடியாது
#அழும்_குழந்தை_பார்த்து
#கண்ணீர்_சிந்த
#காலம்_கடக்கிறது

#யார் வருவார்
#யார் தருவார்
எங்கள் நிலையை
#யார் புரிவார்
ஏங்கியே காலம் எல்லாம்
கடந்து போகிறது ….

போரும் தமிழர் எங்கள் வாழ்வும்
சிதைந்து போன கூடாக
சீரின்றிய வாழ்க்கை முறையும்
தெருவெல்லாம் கையேந்தி
கையறு நிலையாகவே
கடந்து போவது வேதனையே….
கண்ணீரோடு போகிறதே….

ஜெசுதா_யோ