பூமுகம் !கவிதை அ.பவளம் பகீர்

 

பூமுகம் பார்க்கையில்
பேரானந்தத்தில் மிதக்கிறேன்
நீ சிந்திடும் புன்னகையில்
என் பசி எங்கோ போனதே
மழலையாய் மடி தவழ்ந்திட
மறு ஜென்மம்தான் எடுத்தேனே
தவத்தால் கிடைத்தாய்
தரணியில் பெருமை தந்தாய்
எந்தன் பெண்மை
உன்னால் தாய்மை கண்டதே
தொப்புள்கொடி அறுத்தே
தொடங்கி வைத்தாயே நீ
அம்மா என்ற உறவினைத்தானே…!!

அ.பவளம் பகீர்.

Merken