***பூவிழி நோகுது கண்ணா***கவிதை பிரிவுநேசன்

கோர்த்திருந்தாய் உன்கைகளை அன்று
…..கூடிமகிழ்ந்தோம் இதே மரத்தடியில்
சேர்த்திடவேணும் சொத்துக்கள் என்றே
……சென்றாய் நீயும் என்னைப் பிரிந்தே
பார்த்திருக்கிறேன் வழிமேலே விழிவைத்து
…..பாதை முழுவதும் உன்னது உருவமே.
பூத்திருக்கிறேன் எப்பொழுதும் உனக்காய்
……பூவிழிதான் நொந்து போகுது கண்ணா
காத்திருப்பேன் உனக்காய் என்றென்றும்
……கணப்பொழுதேனும் உன்னை மறவாது

ஆக்கம் பிரிவுநேசன்