பெண் உன்னில் சரிபாதி…!கவிதை.ரதிமோகன்

அன்பால் , பண்பால் ,அன்னையாகி
அரவணைக்கும் ஆதி சக்தியின்
மறு வடிவமானவள் பெண்
அவளின்றி அணுவும் இங்கு அசைய
மறுக்கும்…

வாழ்க்கைப் படகின் துடுப்பாகி
வாசம் வீசும் மல்லிகையாய்
முத்தமிட்டு பக்கம்வரும் தென்றலவள்
சீண்டிப்பார்த்தால் சுழன்றடிக்கும்
சுனாமியும் புயலும் அவளே..,

சந்தனத்து மேனிக்காரி சலவைசெய்த
சுந்தர உருவக்காரி கவிஞர்கள் வர்ணணைக்கு சொந்தக்காரி
தீண்டினால் எரித்துவிடும் செந்தணல்
ரோசக்காரி…

இல்லத்தை ஆலயமாக்குவாள்
இன்பத்தை பதிகமாய் படிப்பாள்
மழலையை சுமந்து உன் வாழ்விற்கு
அர்த்தம் சொல்லி நிற்கும் தேவதையும்
அவள்தானே…

அவளை உன்னில் சரிபாதியாக்கிவிடு
ஆதிக்க அடிமை வெறியை அழித்துவிடு
அவனியில் பெண்ணைப் போற்றிப்பாட
நாடும் வீடும் சிறக்கும் சொன்னால்
நீ நம்பு….

ஆக்கம் ரதிமோகன்