பெண்..!


இயற்கையும்
பெண்ணும்
ஓரங்கம்..
பேணிட
மறந்தால்
பேரவலம்..
வாழ்க்கை
எனும் சங்கீத த்தில்
அழகான சுரம்..
கணக்கு
தவறின் வார்த்தைகள்
அபசுரம்..
கனிவான
வார்த்தைகளின்
சுரங்கம்.
ஊகிக்க
முடியாத
அந்தரங்கம்..
வென்றிட
முடியாத
சதுரங்கம்..
நம்பிக்கை
வைத்தால் அவளே
தும்பிக்கை பலம்..
அவ நம்பிக்கை
கொண்டால்
அழிவு நிரந்தரம்.
பதமடி
நின்றால்
மகமாயி..
படம்
காட்டினால்
பத்திரம் பத்திரகாளி..
விவகாரமாய்
நடந்தால் பெரும்
வில்லங்கம்..
நேசிக்க
தொடங்கினால்
அழகான இலக்கியம்..
அன்புக்கு
நிகரில்லா
இலக்கணம்..
வைப்பினை
அறிய முடியாத
சுவிஸ் வங்கி..
நிர்வாகத்
திறன்
கொண்ட அதிகாரி.
ஒவ்வொரு
குடுபத்துக்கும்
பெண்ணே வரம்..

ஆக்கம் கவிஞர் தயாநிதி பிரான்ஸ்