பெனிலின் “ ஈர நிலத்தை எதிர்பார்து “ கவிதை தொகுப்பு வெளியிடப்ப்பட்டது

மன்னார் பெனில் அவர்களின் இரண்டாவது கவிதை தொகுப்பான “ ஈர நிலத்தை எதிர்பார்து “ கவிதை தொகுப்பு இரண்டாவது பதிப்பாக புன்னகை அமைப்பின் முழுமையான உதவியுடன் பதிப்பிடப்பட்டு மிகவும் சிறப்பாக வவுணியா அருந்ததி மண்டபத்தில் அறிமுக விழா நடைபெற்றது.

இவ் விழா சிறப்புற நடைபெறுவதற்கு பலரும் பல்வேறு விதமான உதவிகளை செய்திருந்தார்கள். அந்த வகையில் நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க பல்வேறு சமுகப்பணிகளை செய்து வரும் புன்னகை அமைப்பின் ஜீவன் அவர்களுக்கும் ஆலேசனை வழங்கிய சிறிஸ்கரன் அவர்களுக்கும்
புன்னகை அமைப்பின் பணிப்பாளர் சபை உறுப்பினர் திருமதி. இ. சுகுனா அவர்களுக்கும் புன்னகை அமைப்பின் தலைவர் திரு.க.சர்மிலன் அவர்களுக்கும் மதிப்புக்குரிய மாவட்ட சமுகசேவை உத்தியோகஸ்தர் எஸ்.எஸ் வாசன் அவர்களுக்கும் திரு.வசந்தன் திரு. முகுந்தன் அவர்களுக்கும் இன்னுமாய் புன்னகை அமைப்பின் அழைப்பை ஏற்றும் என் அழைப்பை ஏற்றும் விழாவுக்கு வருகைதந்து தலைமை தாங்கிய திரு.தமிழ்மணி அகளங்கன் ஐயா அவர்களுக்கும் மற்றும் சிறப்பு விருந்தினர்களாகவும் கௌரவ விருந்தினர்களாகவும் வருகை தந்து சிறப்பித்த அத்தனை உள்ளங்களுக்கும் இலக்கிய நண்பர்களுக்கும் மன்னார் பெனில் அகமகிழ்ந்த நன்றிகள்.கூறின்றார்