பெருமை…

பெருமை…
……………..
மணிக்குரலில்
மணிக்குரலாய்
உன் குரல் வளம்
அறிந்தவர்களில்
நானும் ஒருவன்…

தனித்துவமான
தன்மான கலைஞன்
நீ என்பதனை
உன்னோடான உறவில்
உணர்ந்தவன் நான்.

அடுத்த தலை முறையினரின்
உயர்வுக்கான உன்
உழைப்பு அறிவோம்.
காலம் உன் வசமாகின்றது…

உன் விதை
சீராகவே அறுவடையாகின்றது.
கடல் தாண்டி
ஒரு மாபெரும்
தமிழ் அரங்கு….

சிறப்பான
வாழ்த்துக்கள்
நண்பா..இவன்
என் நண்பன்
என்பதில் பெருமை…
நல் வாழ்த்துகள்..

உன் நேசிப்பில்
இவன் பந்தம் நீளும்..

என்றும் ரி தயாநிதி