பெருமை…

நாடகத்தால்
சிலருக்கு பெருமை.
இவரால்
நாடகத்துக்கு பெருமை.
புலம் பெயர்ந்து
வந்தும் டெனிஸ்
நாடகக் கொம்பனியில்
தொழில் நிலைக் கலைஞனாக
வாழும் முதல் ஈழத் தமிழன்.

இவரோடும்
இணைந்து நடித்தது
இனிக்கும் பெருமை.
புத்தூர் யோகராஜா
போட்டி நாடகங்களில்
ஈட்டிய வெற்றிகள்.
பட்டி தொட்டி எங்கனும்
அரங்கங்கள் கண்டவன்.

இளங்கோ வள்ளுவன்
திருமகள் கலைமகளென
அழகிய நாமங்களுடன்
கலை உலகை ஆழும்
வாரீசுகள்.பேரப்பிள்ளைகளும்
தாத்தா வழி தடம் பதிப்பது
கண் கூடு…

குரல் வளம் பெரு வரம்.
காத்தான் கூத்து நடிகர் பாடகர்
கவிஞர் எழுத்தாளர்.சக
கலைஞர்களை மதிக்கும்
பண்பாளன்.விருந்தோம்பல்
வீடு சென்றோர் அறிவர்..
வாழ்த்துவதும் பெருமை
வாருங்கள் வாழ்த்துவோம்.
வாழும் காலத்தில் நாம்
வாழ்வதும் மிகச் சிறப்பு.

ஆக்கம் கவிஞர்தயாநிதி