பெரும் பேறு..!

பேரன்
பேத்தியின்
விடுமுறை
வரவுக்கான
காத்திருப்பில்…
எத்தனை
சுகமிருக்கும்
வலிகளை
மறக்க வைத்திடும்
சுவை நிறை
சித்தர்கள்.
உடலுக்கும்
உள்ளத்துக்கும்
அவர்கள் இடும்
ஒத்தடங்கள்
அத்தனையும்
நெடு சுகம்.
கவலைகள்
எனும் கயப்பு
கலைக்கும்
கற்கண்டுகள்.
என் மனத் தோட்டத்தில்
அழகான பூக்கண்டுகள்.
சொத்து
சுகம் கடந்த
முத்துக்கள்
வாழ்வை
ரசிக்க வைத்திடும்
அற்புதர்கள்.
இவர்கள்
கிடைக்கப் பெற்றால்
பெரும் பேறு..

கவிஞர் ரி தயா‌நிதி