பேசுகின்றன ரோஜாக்கள்….கவிதை கவிஞர் ரதிமோகன்

மென்பனியில் நனைந்து இதழ்கள்
உதிர்த்தி மெல்ல மெல்ல சாகும்
காலத்தின் கட்டளைக்குள்ளும்
புன்னகைக்கும் அழகு ரோஜாக்கள்
நாங்களல்லவா..

மனம் நொந்து வாழ்வை முடிக்க
நினைக்கின்ற மனவலிமையற்ற
கோழை மனிதர்களே எமை பாரீர்
யாருக்குத்தான் சோகமில்லை
வாழ்க்கை அழுது மடிவதற்கல்ல.
வாழ்வதற்கே..

காலம் இன்று எம்மை தடுக்கலாம்
மீண்டும் எம் செடிகளும் பூக்கும்
மணம் பரப்பும் வசந்தகாலகனவுகளோடு
மண்ணை இதழ்களால் அலங்கரிக்கும்
எமை பாருங்கள் அழைத்தன
அந்த ரோஜாக்கள்..

மனதில் உறுதி வேண்டும்
அன்போடு

                                                                                                                  ஆக்கம் ரதிமோகன்