பேரிழப்பு;;

ஆண்டு ஒன்று
துவண்டது
ஆனாலும் உங்கள்
நினைவுகள்
நீண்டது…..
எங்கள் மனங்களில்
வாழும் வரம்
கொண்டது….உன்
எழுச்சி கீதங்கள்
ஒலிக்கின்றது….
…..
காற்றும்
உன் மூச்சினை
கடன் வாங்கித்தான்
தான் வாழ
வேண்டுமா;;!

எழுச்சிப்
பாடகனே
தோற்றுப்
போனதடா
எங்கள் கனவு;;!

நேற்றுப்
போல் இன்றும்
உன் குரல்
செவிப் பறைகளில்
முட்டி மோதி
எழுச்சியை
மூட்டுதடா;;!

இலட்சம்
துப்பாக்கிகளுக்கு
ஈடான உன்
இலட்சியப்
பாடல்கள்
எதிரிகளுக்கு
சங்கூதிட
வீரருக்குக்கு
உணர்ச்சி தீ
மூட்டியதடா;;!

மறைந்தும்
வாழும் பாக்கியம்
உனக்கானது
வாடும் இனம்
உன் பாடலோடு
விடியலைத் தேடி
ஓடிக்கொண்டே
இருக்கும்; வாழ்வை
வென்றவனே
சென்றுவா
வீர வணக்கம்;;;!
உந்தன்
நினைவில் நாம்
காண்ணீருக்குச்
சொந்தமானோம்;

கவிஞர் தயாநிதி