பேரிழப்பு


ஈழக் கலையின்
பிதாாமகன்.
எங்கள் நேசக்
கலைத் தந்தை.
வாழ்வியல் கணக்கினை
பூர்தியாக்கி
பூவுலக வாழ்வினை
வெற்றி கொண்டு
பயணித்துள்ளார்…
அண்ணா உங்கள்
பிரிவு எவராலும்
ஈடு செய்ய முடியாதது.
இறுதி நேரம் வரையும்
நாடகம் பற்றிய உன்
மூச்சுக் காற்று
எங்கள் இதயதம் வரை
தொட்ட படியே…
நேற்று வரை
நாளைய கலை
ஆற்றுகை பற்றியே
பேசிக் கொண்டிருந்தாய்.
உங்கள் தயாரிப்பிலும்
நடிப்பிலும் வெளி வரும்
முழு நீள திரைப்படம்
திரையிடல் பற்றி….
நீள உரைத்தாய்.
எழுதிக் கொண்டிருக்கும்
சம கால கலைஞர்கள்
பற்றிய விபரக்கோவை பற்றி
விளக்கிய படி வாழ்ந்தீர்கள்..
கலை வாழ்வில் எம்மை
வாசிக்க வைத்த பெரு நூல்
தன் பக்கங்களை மூடிக்கொண்டது…
அண்ணா உங்கள்
பிரிவால் துயருறும்
அனைவருக்கும் எங்கள்
ஆழ்ந்த இரங்கல்களையும்
ஆறுதல் வார்த்தைகளையும்
தெரிவிக்கின்றோம்…
ஆத்மா சாந்தி பெறட்டும்…
சாந்தி சாந்தி சாந்தி.

கலைஞர் ரி.தயாநிதி