பொம்மை! ஆக்கம் கவிஞர் சத்யா

பின்வாசல் ஆட்சி
மக்கள் குறைகளைக்
கேட்க மறுத்து
காதுகளை மூடிக்கொண்டது..

பசி பட்டினியால்
மக்கள் துடிப்பதைக் காண
அச்சத்தால்
கண்களை மூடிக் கொண்டது..

ஊரடங்கு சட்டத்தால்
மக்கள்
நலன்களுக்காகப்
பேச மறுத்து
ஊமையானது..!

மூன்று குரங்கு
பொம்மை கதை
காந்தி சொன்னது..
நம் நாட்டில்
உண்மையானது!
**
ஆக்கம் கவிஞர் சத்யா பிரான்சிஸ்