பொழுதுக்குள்…!கவிதை கவிஞர் தயாநிதி

இயற்கை
தன் பணி
மறப்பதில்லை.

இரவும்
பகலும்
யார் சொல்லியும்
இயங்குவதில்லை..

பூமியின்
நகர்வில்
மாற்றமேதும்
இருப்பதில்லை.

தன்னையும் சுற்றி
சூரியனையும் சுற்றி
சழலுது…இருளும்
பகலும் சாட்சியம்..

மனிதனின் -சுத்து-மட்டும்
சுற்றத் தொடங்கினால்
தர்மம் தொலையும்
அதர்மம் நீளும்….

ஆக்கம் கவிஞர்தயாநிதி