மனதில் மட்டும் நினைவுகளாய் மீட்டி ப்பார்களாம்

நாம் மண்ணில் மனிதனாய் பிறந்தபோது
மழலையென்ற மகிழ்வோடு
மலர்முகம் சிலிர்க்க …

அள்ளி அனைத்து ஆண்டுகள் போக …
அடியெடுத்து நடைபழகி
ஏடு துவாகி அதில் அ எழுதவைத்து
எம் பெற்றோர் ..
பாடுபட்டு பள்ளி அனுப்பிவைத்து
படிக்கவைத்த காலத்தை
இன்று நாம் நினைக மனம் மகிழும்

பென்சீல் கூர்முறிய புதிது கே ட் டு அழுத நா ள்கள்
புதிது வாங்கித்தர கொண்டாடி மகிழ்ந்த நா ள்கள்
பேனை கையில்வர பெருமைகொண்ட அந்த நாள்கள்
மீண்டும் வரப்போவதில்லை …
மனதில் மட்டும் நினைவுகளாய் மீட்டி ப்பார்களாம்

ஆக்கம் இசைக்கவிஞன் எஸ்.தேவராசா