“ மனிதா அன்பை விதைத்துவிடு“கவிதை கவிஞர் மயிலையூர்இந்திரன்“

மனங்கள் மாறியதோ!
மதம் பிடித்ததுவோ!
ஆணவம் கொண்டெழுந்து
அநியாயம் நடக்கிறதோ!
கொலைகள் கொள்ளைகள்
வஞ்சனைகள் எத்தனையோ
மனிதனை மனிதன் துண்டாக்கி
மண்ணுக்குள் புதைக்கின்ற
கொடும் நிலையோ!
பார்க்க முடியுதில்லை
அமைதி குலைத்து
அன்பைத்தொலைத்து
அறத்தை மறந்து
அட்டூழியம் நடக்குது
கொடும் நிலைமாறாதோ!
அவலங்கள் தீராதோ
இது மதங்களின் வெறியாட்டமா!
நாம் என்ன அகங்காரமா
வாழவிடு இல்லை விலகிவிடு
மனிதம் வாழப்பாடுபடு
மனிதா அன்பை விதைத்துவிடு
 ஆக்கம் கவிஞர் மயிலையூர்இந்திரன்