மனிதா…


உள்ளத்தில் உறுதி வேண்டும்
நற்சிந்தனைகள் என்னாளும்
உனக்கு வேண்டும் .

தெழிந்த பார்வைகள்
திடமான நம்பிக்கைகள்
சாதிக்கும் மனோபலம்
வெற்றிகொள்ளும்வரை
விடாமுயற்சி…

தோல்விகள் சகஜமே
அதைக்கண்டு
துவண்டுபோவது கொடுமையே .

இருளகன்று ஒளி பிறக்கும்
பொறுத்துக்கொள்ளும் மனதை
வளர்த்துக்கொள் உன்
வாழ்க்கைப்பயணம் சிறப்பாகும்…!!!

உண்மை நாயகன் நீயே!
உண்மை நாயகி நீயே!

அன்புடன்
ஈசன் சரண்(நாக கேதீஸ்)