மயக்கத்தின் கிறுக்கல்கள்…

என் இராட்டினப் பார்வையால்
பூப்பெய்தியது அவள் நாணம்.
துளித் துளி ஜாடைகளின் சாரல்கள்
என்னை நிறம் மாற்றி வெள்ளையடித்தன.
ஆசைத் தூரிகையால்
நான் வரைந்த சித்திரம் அவள் பிம்பம்.
அச்சடிக்கப்பட்ட நாளிதழாய்
அவள் கனவுகள் எனக்குள்…

போதையேற்றிய பூங்காற்றில்
பறவையாகிறது என் காதல்.
அவள் என் ஆயுள் கவசம்.
சிதறி விழும் சிரிப்புத் துண்டுகளை
தொல்பொருளாய் உயிர் சேகரிக்கிறது.
அவள் அவள் விழிப்பார்வைகள்
நீரிலும் நெருப்பை மூட்டுவதால்
புல்லரிக்கிறது.

மயக்கத்தின் கிறுக்கல்கள்
மஞ்சம் கொஞ்சும் அழகள்ளி
அவள் தனமலையேறுகிறது.
நட்சத்திரப் பொத்தான்களை
கதிர் விரல்களால் கழற்றிய படி
காமத்துப்பால் கண்ணடிக்கிறது…

கலைப்பரிதி