மரம் நடுவோம் பலன் பெறுவோம்*

மரம்நடுவோம்பலன்பெறுவோம்*
~~~~~
பனிவிழும் நாட்டிலே
கனிதரும் மரங்கள்
காய்ந்து கிடக்கு
இனிவரும் காலம்
மெல்லத்தளிர்விடும்
பூக்கும் காய்க்கும்
கனிதரும்
அதுவரை காத்திருப்போம்

இது காலநிலைமாற்றம்
வானத்தை பாத்து
வளரும் மரங்களைவிட
கட்டிடங்கள் இங்கே உயரமாகுது

பெரும்குளிரிலும்
போர்வை இல்லாமலும்
பெரும் நோய்த்தொற்றிலும்
முகக்கவசம் போடாதமரங்கள்
தளைத்தால் கனிகள் தரும்
பட்டால் விறகு தரும்

சாதிபாராமல் மதம்பாராமல்
இனம்பாராமல்
எத்தனை பறவைகளுக்கு
ஆறிப்போக இடம் கொடுக்கும்
கூடுகட்டக்கிளை கொடுக்கும்
பசிதீரக்கனி கொடுக்கும்

மரங்கள் இயற்கையின் வரங்கள்
இறைவனின் படைப்பின் அற்புதங்கள்
இதை மறந்தால் மனிதன் இறந்தான்

மண்ணை வளமாக்குவோம்
பசுமையான சோலையாக்குவோம்
மரம் நடுவோம் பலன் பெறுவோம்
வரும் சந்ததிக்கு கனிகள்
கிடைக்க வழிசெய்வோம்

பல்துறைக்கலைஞர், கவிஞர் (மயியூர் இந்திரன் )

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert