மானிப்பாய் இந்துக்கல்லூரி, யாழ் /மகளீர் கல்லூரி பழைய மாணவர்கள், „பொன்மாலைப்பொழுது “ சிறப்பாக நடைபெற்றது.

28.04.2018 (சனிக்கிழமை) யாழ் /மானிப்பாய் இந்துக்கல்லூரி, யாழ் /மானிப்பாய் மகளீர் கல்லூரி பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் இணைந்து நடாத்திய யேர்மனி பழையமாணவர்கள் „பொன்மாலைப்பொழுது “ நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பிரதமவிருந்தினராக யேர்மனி கம்காமாட்சி அம்பாள் ஆதீன குருமணி „பக்குவத்திருமணி “ சிவஸ்ரீ. ஆறுமுக.பாஸ்கரகுருக்கள் அவர்களும், சிறப்புவிருந்தினராக „கவிமாமணி “ கி.த.குகதாஸ் அவர்களும் கலந்துகொண்டார்கள். பி.ப 4மணிக்கு மங்கலவிளக்கேற்றலுடன் விழா இனிதே ஆரம்பமானது.
இவர்களுடன் குறும்பட இயக்குனர்நடிகர்கள் பாடகர் கண்ணன் குடும்பத்தினரும் நிகழ்வில் பங்குகொண்டு சிறப்பித்தனர்கள்