மாலை சூடும் நாளை எண்ணி

மன்னவனை மனதில் எண்ணி மாலையொன்று கோர்க்கின்றாள்.
மாலை சூடும் நாளை எண்ணி
மாது அவள் தவிக்கின்றாள்.

மனாளன் கரம் பிடிக்க கனவினில் மிதக்கின்றாள்.
மங்கள நாண் அணிய மனதில் ஆசை வளர்த்தாள்.
மனைவியாய் அவன் தோள் சாய மயக்கம் கொள்கின்றாள்.
ஒவ்வொரு மலரிலும் ஒவ்வொரு ஆசையாக தொடுக்கின்றாள்.

தென்றலின் வருடல்களை அவன் வருடலாகக்காண்கின்றாள்.
அண்ணலைச்சேர்ந்திடவே கடவுளை வேண்டுகின்றாள்.
மட்டுநகர் கமல்தாஸ்