மிரளுமுள்ளம்!கவிதை ஜெசுதா யோ

இளமையைப் பார்த்து
பரவசம் காணும் நம் இதயம்
முதுமையைக் கண்டு மிரள்கிறது
நாளை வரப்போகும் முதுமை,
நமக்கென்பதை மறக்கிறது மனது…!

நிலையாய் இளமையோடு இருந்திட ஏங்கிறது பலரதும் உள்ளம்
எதைநாம் வெறுக்கிறோம்
அது நாளும் பொழுதுமாய்
எம்மை நாடிவருவது அறியாமல்,…!

ஏளனமும் கேலியும்
கிண்டலும் செய்கிறது உதடுகள்,..
கிழமாகி கூனி குறுகி இருப்பவர்கள்
முன்னொருகாலம் முதுமையைப்பார்த்து பயந்தவர்களே…!!

வாழும் காலம் சிறிதே
பொய்யின்றி களவின்றி
பெற்றவர்களையும்
மற்றவர்களையும்
போற்றாவிட்டாலும்
தூற்றாது வாழ்வோமே,…!!

 

ஆக்கம் ஜெசுதா யோ