மீட்பர்கள்….



சத்தமில்லா
யுத்தமதில்
நித்தமும் போராடும்
வைத்தியர்கள்…
பக்கபலமாக
தாதியர்கள்.
கடவுளின் தூதர்களா
கடவுள்களா..
சட்ட ஒழுங்குளை
நெறிப்படுத்தும் நகர்
காவலர்கள் மற்றும்
அவசர நோய் காவி
வண்டிகளின் சாரதிகள்.
சுத்திகரிப்பு பணியின்
தூயோன்கள்.என
வாழ்த்தவேண்டிய
உன்னதர்களையும் நெஞ்சில்
நிறுத்துவோம்..
எல்லைகளை
மீறி மனித
உயிர்களை காவு கொள்ளும்
எதிரி கொரேனா..
எதேட்சையா
ஏவலா? ஏதுமே
புலப்படாத மாதிரியே
கண்கட்டி வித்தையா?
சத்தியப்
பிரமாணங்கள்
செய்த வைத்தியர்கள்
சாத்தியமானார்கள்..
தம் சாவை
சட்டப்பைகளில்
சுமந்த படி மற்றவர்
சாகமல் காக்கும்
உத்தமர்கள் தான்
எங்கள் மீட்பர்கள்.

கவிஞர் தயாநிதி