***முடிவில் இதுவே முடிவானது***

மலரே உன்னை நானும் மணக்க
………மலைகள் பல தாண்டி வந்தேன்
தளரா மனதோடு தடைகள்பல தாண்டியே
………தளிரே உனைத் தரிசிக்க வந்தேன் .
உளமார உன்னை உறவாக நேசித்தே
………உயிரே உன்னிடம் ஓடி வந்தேன் .
பலராலும் பலதடவைகள் பலதடைகள்
…..பாதையெல்லாம் முட்படுக்கை சகியே
விலகமுடியா விரகதாபம் எனைவாட்டவே
…..வீறுகொண்டேறிவந்தேன் உன்மடிதேடி
அழகே உனக்காய் என் முயற்சி இதே
……அன்பே முடிவில் இதுவே முடிவானது
ரோசாநேசன்