முதல்மரியாதை

கலைக்காக வாழ்ந்து
கலையோடு கலந்தவர்களை
காலம் ஒருபோதும் மறவாது

கலைஞர்களின் பெரும்படைப்புகள்
காலஞ்சென்றாலும் அழியாது
அவை என்றும் நிரந்தரமானது

நாடகவரலாற்றில் வாழ்ந்த
நம்கலைமுத்துக்கள்
படைத்த காவியங்கள்
அத்தனையும் வைரங்கள்

வாழ்ந்து மறைந்தாலும்
நெஞ்சைவிட்டு அகலாத எங்கள்
கலைஞர்களை மறவாது வாழ்வோம்

கண்முன்னே இருக்கும்
கலைஞர்களை நாளும் வாழ்த்துவோம்
இதுவே கலைக்கும் கலைஞர்களுக்கும்
நாம் செய்கின்ற முதல்மரியாதை

(மயிலங்காடுஇந்திரன்)

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert