நின்
நாமம் நான்
நினைந்தால்
வரிகள் சுரக்கும்..
உன்
புகழை
உச்சரித்தால்
பாக்கள் பிறக்கும்.
நாளும்
உனையே நினைந்தால்
உள்ளம்
உறுதி கொள்ளும்..
என்
மொழியின்
எழிலே நீயின்றி
எங்கும் நான்
நகரேன்.
வாழ்வில்
நான் தமிழன்
என்பது நெடு
வரமே.
கவிஞர் ரி.தயாநிதி