முத்தமிட்டு முகமலர்ந்தாள்

சொத்தென என் முகம் பார்த்தவேளை
சொர்க்கமென பட்டவலி அத்தனையும் மறந்தாள்
பெற்றெடுத்து உச்சிதனை முத்தமிட்டு முகமலர்ந்தாள்
கட்டியணைத்து கனவுகளில் மிதந்தாள்
ஆசைகளை துறந்து பாசமதை உயிராய் வைத்தாள்
ஆரோக்கியமாக எனை பெற்றிட நினைத்தே
ஓராயிரம் வலியோடு போராடியே களைத்தாள்
எனக்காய் தினம் தினம் செத்து பிழைத்தாள்
என்னையே உயிரின் உயிராய் நினைத்தாள்
தன்னையே எண்ணாது தரணியில் உலவினாள்
தனக்காய் வாழத்தெரியாமல் எனக்காய் துடித்தாள்
தன்னலமற்ற ஒரு அன்பான ஜீவனாய் திகழ்ந்தாள்
தன்னிகரில்லாத தியாகத் தீபமாய் உருகி ஒளிர்ந்தாள்
தன்னை உருக்கியே உதிரத்தால் எனை செதுக்கினாய்
உன்னையே அர்ப்பணித்து உறவானாய் அம்மா…!!
#அம்மா_அன்பின்_முடிவிலி.
✍?பவளம் பகீர்.