முள்ளிவாய்க்கால்!கவிதை ஜெசுதா யோ

நினைவு நாளை நோக்கி
நகரும் நாட்கள் வேகமாக
நெஞ்சத்தில் திகிலிடும்
நினைவுகள் அனைத்தும்
கண் முன்னே
காட்சிப் படமாக
கலங்க வைக்கிறது
காயங்கள் இங்கே
புதுப்பிக்கப் படுகிறது …

மாறாத வடுக்கள்
எத்தனை எத்தனை
இரத்த சொந்தமிழந்து
இரத்தக்கண்ணீர்
வடிக்கிறதே என் இதயம் …

மாண்டவர் மீளமாட்டார்
நெஞ்சம் அறிந்த உண்மை
நினைவுகள் அழிவில்லையே….
சுடுகாடான எம் தேசமும்
நெஞ்சத்தில் பதிவானதே….#

ஆக்கம் ஜெசுதா யோ