முள்ளிவாய்க்கால்

மெல்ல மெல்ல
நாட்கள் நகர்கிறது
நாம் இழந்த சொந்தங்கள்
ஏராளம்

நாளும் ,பொழுதும்
இவை எண்ணில் அடங்காதவை
இருந்தும் ஒரே நாளில்
ஒட்டுமொத்த உலகமும்
சேர்ந்து அழித்த அந்த நாள்
பல இலட்சம் மக்களை
எம் உறவுகளை
உயிரோடும் பிணமாகவும்
புதைத்த நாள்

இதயங்கள் எங்கும்
இரத்தக் கண்ணீர் வடித்து நிற்றபொழுதுகள்
ஏக்கங்களைச் சுமந்த
அந்த நாள் இதயம் எங்கும்
இடியளாக..

இன்னும் மீளாத ஈழம் என்று
இறுதி நொடிவரை
ஏங்கிய அந்தக் கணங்கள்
இன்னும் வலிகளோடு
எல்லா நாட்களையும் கடந்தாலும்
அந்த இறுதி நாள்..

எண்ணும் போது
இதயம் துடிப்ழக்கிறதே
கண்கள் நீரைச் சொரிகிறதே
உணர்வுகள் கூட மரத்துப் போகிறது
இனியும் உருப்பெற மாட்டாதா
எங்களுக்கு என்ற ஒரு தேசம்
உருவாகாதா என்ற ஏக்கம்
எங்கள் இதயங்களை வாட்டுகிறதே

நாளை மலரும்
நமக்கென்று
ஒரு நாடு என்றே
நம் நம்பிக்கை
சிதையாது வாழ்கிறோம்
கண்களில் கண்ணீர் சுமந்து
நெஞ்சினில் நம்பிக்கையோடு
காத்திருக்கிறோம்

ஜெசுதா யோ