மூலதனம்;;;!கவிதை கவிஞர்தயாநிதி

அழிவின்
விழிம்பில்
ஒழித்தலின்
ஓரத்தில்..

ஓயாத
துயரங்கள்
இடையறாத
இன்னல்கள்
இராணுவப்
பார்வைகள்..

பள்ளி
சென்று
மீளும் வரை
கெடு பிடிகள்
துன்புறுத்தல்…

உயிர்
அச்சுறுத்தல்
பொருளாதார
சீர்கேடுகள்
கலாச்சார
மாறுதல்கள்..

அனைத்து
தடை உடைத்து
விடை கண்ட
மாணவச் செல்வங்கள்
உயர்தரம்
எட்ட க.பொ.த
பரீட்சையின்
உன்னத பெறு
பேறுகள்…

கல்வி
ஒன்று தான்
தமிழனின்
மூலதனம்
எனச் சிறப்பான
அறுவடை
கண்டு
வாழ்த்துவோம்.
அவர்கள்
வளர்ச்சிக்கு
உரமிடுவோம்..!

ஆக்கம் கவிஞர்தயாநிதி