மெல்ல மெல்ல!கவிதை ஜெசுதா யோ

மெல்ல மெல்ல
பனிக்காலம் கையசைக்க
இளவேனில்
எழில் முகம் காட்டுது..
பகலவன் வானத்தில்
வண்ணத்திரை விலக்கி
எட்டிப் பாக்கிறான்
மரங்களில்
துளிரும் இலையும் பூவும்
எழில்மிகு நாட்களின் தொடக்கம்..
நாடு திரும்பும் பறவைகள்
கூடு தேடும் குருவிகள்
மொட்டு அவிழ்க்கும் மலர்கள்
அதனை மொய்த்திருக்கும்
வண்டினங்கள்..
உள்ளம் எல்லாம்
கொள்ளை போகிறது
இறகு முளைத்து
வானத்தில் சிறகடிக்கிறது..

ஆக்கம் ஜெசுதா யோ